தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

30 நாள் விசா இல்லாத திட்டம் இந்தியர்களுக்கு மலேசியா எச்சரிக்கை: பணம், ஆவணம் இன்றி தரையிறங்க முடியாது

புதுடெல்லி: போதுமான பணம், உரிய ஆவணம் இன்றி 30 நாள் விசா இல்லாத திட்டத்தில் வந்தால் தரையிறங்க முடியாது என இந்தியர்களுக்கு மலேசியா எச்சரித்துள்ளது. வணிகம், சுற்றுலாவை மேம்படுத்த இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியாவில் 30 நாள் விசா இன்றி தங்கலாம். இந்த திட்டம் கடந்த 2023 டிசம்பர் முதல் 2026 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இந்நிலையில், இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மலேசிய குடியேற்ற விதிகளின்படி, பயணத்திற்கான போதுமான நிதி, தங்குமிடத்திற்கான ஆதாரம், நாடு திரும்பும் டிக்கெட் இல்லாமல், 30 நாள் விசா இல்லாத திட்டத்தை பயன்படுத்தி வேலை தேடும் நோக்கத்தோடு வருபவர்கள் குடியேற்ற விதிகளை மீறுபவர்களாக கருதப்பட்டு அவர்கள் தரையிறங்க முடியாத பிரிவில் சேர்க்கப்படுவார்கள். அப்படி வருபவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அவர்களை திரும்ப அழைத்துச் செல்லும் வரை விமானத்திலேயே தங்கியிருக்க வேண்டும். 30 நாள் விசா இல்லாத திட்டம் மலேசியாவில் வேலை தேடுவதற்கான நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதல்ல. எனவே, வேலைவாய்ப்பு உறுதி அளிக்கும் ஏஜென்ட்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News