தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டையில் விளையாடியபோது அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

Advertisement

*பாணாவரம் அருகே சோகம்

சோளிங்கர் : பாணாவரம் அருகே குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன்.

இவரது மகன் புவனேஷ்(9) அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரின் மகன்கள் மோனி பிரசாத்(10), சுஜன்(8). இவர்கள் அரசு பள்ளியில் 5ம் வகுப்பும், 3ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் சிறுவர்கள் 3 பேரும் நேற்று அருகிலுள்ள குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக 3 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சோளிங்கர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 சிறுவர்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News