தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2வது ரயில் தயாரானதும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அக்டோபர் 15ல் அறிமுகம்? ஒன்றிய அமைச்சர் தகவல்

 

Advertisement

புதுடெல்லி: ரயில்வே திட்டப்பணிகள் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவைக்காக ஷகுர் பஸ்தி ரயில் பெட்டி தொழிற்சாலை கிடங்கில் ஏற்கனவே ஒரு ரயில் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. தற்போது 2வது ரயில் தயாரிக்கப்பட்டு பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் 2வது ரயில் தயாராகிவிடும். வழக்கமான சேவையை பராமரிக்க குறைந்தபட்சம் 2 ரயில்கள் தேவை. அதனால் 2வது ரயிலுக்காக காத்திருக்கிறோம். அதை பெற்றதும், எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது முடிவு செய்யப்பட்டு, 2 ரயில்களும் சேர்த்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும்’’ என்றார்.

தற்போது சேவையில் உள்ள வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளன.

Advertisement