தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2வதாக திருமணம் செய்த கணவரை பிரிந்தார் கள்ளக்காதலனும் ஓட்டம் இளம்பெண் தற்கொலை: 2 குழந்தைகள் தவிப்பு

அருமனை: முதல் கணவர் இறந்ததால், 2வது திருமணம் செய்து கணவரை பிரிந்த இளம்பெண்ணை, கள்ளக்காதலனும் விட்டு விலகி சென்றதால் தற்கொலை செய்து கொண்டார். அருமனை அருகே புண்ணியம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாய். இவரது மகள் பிந்து (34). இவருக்கும் மேல்பாலை பகுதியை சேர்ந்த ஜெயக்குமாருக்கும், கடந்த 15 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகன் 5ம் வகுப்பு படித்த போது ஜெயக்குமார் இறந்து விட்டார். இதையடுத்து பிந்து, மருதம்பாறையை சேர்ந்த வின் என்பவரை 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்து எல்கேஜி படிக்கிறாள்.

Advertisement

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, பிந்து 2வது கணவரையும் பிரிந்து மகன், மகளுடன் மக்காடு மஞ்சாலுமூடு பகுதியில் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையே பிந்துவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், கல்லூரியில் படிக்கும் மகன், மகளும் உள்ளனர். கள்ளத்தொடர்பு, தொழிலாளியின் மனைவிக்கு தெரியவே அவர் கண்டித்துள்ளார். இதையடுத்து தொழிலாளி கடையாலுமூடு அருகே பிலாங்தோட்டவிளை ஆர்சி சர்ச் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பிந்துவுடன் வந்து தங்கியுள்ளார்.

இந்தநிலையில் தொழிலாளியின் மனைவி, கணவர் மீது கடையால் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தொழிலாளியை அழைத்து விசாரித்தனர். இதையடுத்து அவர் மீண்டும் மனைவி, பிள்ளைகளிடம் சென்று விட்டார். இதனை அறிந்த பிந்து, தொழிலாளியிடம் சென்று தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பிந்து, விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பிந்துவுக்கு வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்த நபர், தொழிலாளி உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் செய்த அடுத்தடுத்த தவறான செயல்களால் அவரது மகன், மகள் தற்போது ஆதரவின்றி நிர்க்கதியாக தவிக்கின்றனர்.

Advertisement

Related News