தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மினி வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது: 3 டன் பறிமுதல்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில் தொடர்ந்து கள்ள சந்தையில் ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை புரோக்கர்கள் மூலம் கொள்முதல் செய்து டன் கணக்கில் வாகனங்களில் கடத்துவதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குற்ற புலனாய்வுத்துறையின் ஐஜி தோஷி நிர்மல்குமார் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரஜீத் தலைமையில் காவலர்கள் நேற்று திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
Advertisement

உடனே வேனை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்ற 2 பேரை காவலர்கள் துரத்திச் சென்று பிடித்தனர். விசாரணையில், அவர்கள் காஞ்சிபுரம் ஒலி முகமதுபேட்டையை சேர்ந்த சலீம் (30) மற்றும் கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரத்தை சேர்ந்த வரதன் (50) என்பதும், திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ரேஷன் கடைகளிலிருந்து கள்ளச்சந்தையில் அரிசியை வாங்கி கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 3 டன் ரேஷன் அரிசி மற்றும் மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News