தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி அருகே மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 2 தொழிலாளர்கள் பலி: 20 பேர் படுகாயம்

Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் 22 பேர் இன்று காலை சரக்கு வேனில் கூலி வேலைக்காக காட்டம்பட்டிக்கு புறப்பட்டனர். வால்பாறையில் இருந்து ஆழியார் வரும் மலைபாதையில் வேன் வந்து கொண்டிருந்தது. சின்னார்பதி என்ற பகுதியில் வளைவில் திரும்பும்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்த திலகராஜ் (40), ராணி (55) ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

தகவலறிந்த அழியார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார் (32), தேவகுமார் (25), சந்தோஷ் (18), மதீஷ் (23), மாரிமுத்து (19), வெண்ணிலா (21), காளியம்மாள் (30), தேவபாலா (23), ராசாத்தி (28), காளிமுத்து (17), கன்னியப்பன் (30), சதீஷ் (30), சாந்தி (52), கமலா (65), லாரன்ஸ் (42), சஞ்சய் (20), தண்டபானி (67), மணி (40), மாங்காரு (40) ஆகிய 20 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 3 பேரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement