தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாகனம் மோதி இறந்த முள்ளம் பன்றியை சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது

கோத்தகிரி: கோத்தகிரியில் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்த முள்ளம் பன்றியை சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ராம்சந்த் பகுதி முதல் தாந்தநாடு செல்லும் சாலையில் கடந்த 8ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி முள்ளம்பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இறந்து கிடந்த முள்ளம் பன்றியை ஹெல்மட் அணிந்த நபர் பைக்கில் எடுத்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

தாந்தநாடு பகுதியில் வசித்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த ராஜூ தாபா (32), ஜோசப் (33) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது இறந்து கிடந்த முள்ளம் பன்றியை வெட்டி சுத்தம் செய்து சாப்பிட்டதை ஒப்புக்கொண்டனர். இச்சம்பவத்தில் ஒரசோலை பகுதியில் காளான் உற்பத்தி செய்து வரும் மகேந்திரன் என்பவர் உடனிருந்ததும் தெரியவந்தது. வனவிலங்கை சமைத்து சாப்பிட்ட குற்றத்துக்காக 2 பேரையும் வனத்துறையினர் நேற்று கைது செய்து கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி குன்னூர் கிளைச் சிறையில் அடைத்தனர். தலைமறைவான மகேந்திரனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related News