தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கன்னிவாடி அருகே உரிய அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி அளித்த 29 பேர் கைது

ரெட்டியார்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே மல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (29). இவர் வாட்ஸ் அப்பில் குழு ஒன்றை உருவாக்கி, அதில் கன்னிவாடி அருகே காப்புக்காடு பகுதியில் உள்ள சிவன் கோயில் மலையில், மலையேற்ற பயிற்சிக்கு நபர்களை சேர்த்துள்ளார்.

இக்குழுவைச் சேர்ந்த நபர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில், மல்லையாபுரம் பகுதிக்கு வந்து அங்கிருந்து மலை ஏறும் பயிற்சிக்கு சென்றனர். தகவல் அடிப்படையில், கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையில் வனவர் சபரிநாதன், வனக்காப்பாளர்கள் மற்றும் திண்டுக்கல் தனிப்பிரிவினர் இணைந்து நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 29 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் திண்டுக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

மேலும் லிங்கேஸ்வரன், வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து கட்டணம் வசூல் செய்து அடிக்கடி குழுவாக சேர்ந்து மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தடையை மீறி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், தலா ரூ.4,500 வீதம் மொத்தம் ரூ.1,30,500 அபராதம் விதித்தனர்.

Related News