தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என 28 பேர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி: நடிகை சார்மிளா பரபரப்பு பேட்டி

மலையாள சினிமா படப்பிடிப்பின் போது தன்னை தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக பிரபல தமிழ் நடிகையான சார்மிளா கூறியது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை சார்மிளா கூறியதாவது: கடந்த 1997ல் ‘அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்’ என்ற ஒரு மலையாளப் படத்தில் நான் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். இந்த படப்பிடிப்பில் இருந்தபோது நான் கேரளாவில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கியிருந்தேன். என்னுடன் ஒரு பெண் உதவியாளரும், ஒரு ஆண் உதவியாளரும் இருந்தனர். அப்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளரான எம்.பி. மோகனன், தயாரிப்பு மேனேஜர் சண்முகன் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் என்னுடைய அறைக்குள் திடீரென புகுந்து என்னை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த நான் நொடிப்பொழுதில் அந்த அறையிலிருந்து தப்பிச்சென்று ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார் கூறினேன்.

ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர் தான் என்னை காப்பாற்றினார். எனது பெண் உதவியாளர் உட்பட சில நடிகைகள் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். இதேபோல் பிரபல டைரக்டரான ஹரிஹரன் என்பவர் ‘பரிணயம்’ என்ற படத்தில் என்னை நடிக்க அழைத்தார். அப்போது என்னை அவர் படுக்கைக்கு அழைத்தார். ஆனால் என்னிடம் அவர் நேரடியாக கேட்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பரான நடிகர் விஷ்ணுவிடம் இது குறித்து அவர் கேட்டுள்ளார். அந்த விவரத்தை விஷ்ணு என்னிடம் கூறியபோது நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இதனால் அந்தப் படத்தில் இருந்து டைரக்டர் ஹரிஹரன் என்னை நீக்கிவிட்டார். விஷ்ணுவையும் அந்தப் படத்திலிருந்து அவர் நீக்கிவிட்டார். வேறு எந்த மொழியிலும் இதுபோன்ற மோசமான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு ஒரு மகன் இருப்பதால் தற்போது போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் என 28 பேர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.