தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 28 பேர் மீட்பு

காங்டாக்: சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 28 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சிக்கிமில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு சுற்றுலாவுக்கு சென்ற 2,000க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சிக்கினர். கடந்த 1 ம் தேதி சாட்டேனில் உள்ள ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 வீரர்கள் பலியாகினர். 6 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

லாச்சென்,லாச்சுங்,சுங்தாங் ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலா பயணிகளை ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சாலை வழியாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில்,சாட்டேனில் சிக்கியிருந்த 3 சிறுவர்கள் உட்பட 28 பேரை பேரிடர் மீட்பு படையினர் நேற்று மீட்டனர். அவர்களை ஏற்றி வந்த ஹெலிகாப்டர் பாக்யாங் கிரீன்பீல்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.