தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 பயணிகள் உயிரிழப்பு!

பலுசிஸ்தான்: பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட மிகப்பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் அவ்வப்போது ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானின் முசாகெல் மாவட்ட நெடுஞ்சாலை வழியாக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
Advertisement

அந்த பேருந்தை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்தது. அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அந்த கும்பல், பேருந்துக்குள் இருந்த பயணிகளை கீழே இறங்கி வர வற்புறுத்தியது. அதன்படி பயணிகளும் கீழே இறங்கி வந்தனர். திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பலரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த பயணிகள் அனைவரும் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அவ்வழியாக சென்ற 10 வாகனங்களுக்கும் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீவிரவாதச் சம்பவத்துக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News