தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

20 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

பெங்களூரு: விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் - பூஜா தம்பதி. இவர்களுக்கு சாத்விக் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், விளைநிலத்தில் நேற்று முன்தினம் புதியதாக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். 40 அடி தோண்டிய நிலையில் தண்ணீர் வராததால் பணியை கைவிட்டனர். ஆனால், அந்த ஆழ்துளை கிணற்றை மூடாமல் விட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் குழந்தை சாத்விக், விளைநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் தவறி தலைகுப்புற விழுந்தான். 16 அடி ஆழத்தில் சிக்கிய அவனது அழுகை குரல் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.
Advertisement

இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருடன் வந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மீட்பு பணிகள் தொடங்கிய நடைபெற்று வந்த நிலையில் பக்கத்திலேயே 20 அடி ஆழ குழி தோண்டி அதன் வழியாக நேற்று மதியம் 2.30 மணியளவில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். மீட்கப்பட்ட குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Related News