தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2035ம் ஆண்டுக்குள் ஏஐ மூலம் ஜிடிபியை 600 பில்லியன் டாலர் அதிகரிக்கலாம்: நிதி ஆயோக் கணிப்பு

புதுடெல்லி: பல்வேறு தொழில்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக் கொள்வதன் மூலம் 2035ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 500 முதல் 600 பில்லியன் டாலர்களை அதிகரிக்க முடியும் என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘வளர்ந்த இந்தியாவுக்கான ஏஐ: விரைவுபடுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு’ என்ற தலைப்பில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வது உலக பொருளாதாரத்தில் 17 முதல் 26 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித துறையில் பெரிய அளவிலான பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன் ஆகியவற்றின் கலவையானது, உலகளாவிய ஏஐ மாற்றத்தில் 10 முதல் 15 சதவீத பங்களிப்பை கைப்பற்றும் திறன் கொண்டது.

Advertisement

தொழில்துறைகள் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக் கொள்வது 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட 500 பில்லியன் அல்லது 600 பில்லியன் டாலர் அதிகமாக பங்களிக்க கூடும். வளர்ச்சி அடைந்த இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான 8 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்திற்கு இந்தியா தனது வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமெனில், புதுமைகள் மூலம் புதிய வளர்ச்சியை உருவாக்குவதை தவிர வேறு வழியில்லை. இதில் ஏஐ குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement