தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி: முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி

அகமதாபாத்: ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 184 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் முதல் முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஐ.பி.எல். தொடங்கியதிலிருந்து ஆடி வரும் பெங்களூரு அணி முதன் முதலாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் விராட் கோலியின் 18 ஆண்டுகால கனவு நனவானது. பெங்களூரு அணியில் 35 பந்துகளில் 43 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார் கோலி. பஞ்சாப் அணியில் சஷாங்சிங் 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தும் பயனில்லாமல்போனது. ஐ.பி.எல்-ல் முதல் முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதால் அணி வீரர்கள், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முதலமைச்சர் வாழ்த்து

சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தருணத்துக்காக காத்திருந்த விராட் கோலிக்கு வாழ்த்து. நீண்டகால கனவை சுமந்து வந்த விராட் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானதாக இருக்கும். அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி முழு பலத்துடன் திரும்பும் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News