தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி- சேலம் செல்லும் அரசு பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

வேலூர் : திருப்பதியில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கலால் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சை சோதனை செய்தனர்.

Advertisement

அதில், சந்தேகம் அளிக்கும் வகையில் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்து. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த தென்னவன்(27), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரபத்ரா(31) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 பேரும் நாமக்கலில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தனக்கு கஞ்சா வாங்கி தருமாறும், அதை கூடுதல் விலைக்கு விற்றால் லாபம் கிடைக்கும் எனவும் ராஜேந்திரபத்ராவிடம், தென்னவன் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் ஒடிசாவுக்கு சென்று ஒரு கிலோ 10 ஆயிரத்திற்கு, 5 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு நாமக்கல் சென்றது தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News