தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின் கம்பத்தில் கார் மோதியதில் 2 பெண் நடன கலைஞர்கள் பலி

Advertisement

*வாலிபர் படுகாயம்

ஈரோடு : ஈரோடு வில்லரம்பட்டி அருகே அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த 2 பெண் நடன கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாணிக்கம்பாளையம் காவேரி நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கலைச்செல்வன் (26). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

கலைச்செல்வனின் தந்தை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக கலைச்செல்வன் நேற்று அதிகாலை காரில் செல்ல திட்டமிட்டிருந்தார். இதையறிந்த அவரது நண்பர், கலைச்செல்வனிடம் பி.பெ.அக்ரஹாரத்தில் அவருக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்கள் ஈரோட்டில் இருந்து கோவைக்கு செல்ல இருப்பதாகவும், அவர்களை கோவையில் இறக்கிவிடும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து கலைச்செல்வன் நேற்று அதிகாலை பி.பெ.அக்ரஹாரத்துக்கு சென்று அங்கிருந்த அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த கணபதி மனைவி சவுந்தர்யா (25), கோவை சந்திராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த பட்டுராஜ் மகள் ரிஜ்வானா (20) ஆகியோரை காரில் ஏற்றினார். பின்னர், அவர்களுடன் கலைச்செல்வன் ஈரோட்டில் இருந்து கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு நசியனூர் சாலையில் வில்லரசம்பட்டி அருகே சென்றபோது, கார் கலைச்செல்வனின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி, நிற்காமல் மரத்தில் மோதி, 3 முறை உருண்டு சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த சவுந்தர்யா, ரிஜ்வானா ஆகிய 2 இளம்பெண்களும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த கிரேன் வாகனம் மூலம் காரை வெளியே எடுத்து, காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கலைச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த சவுந்தர்யா, ரிஜ்வானா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில், கலைச்செல்வன் காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி, 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஈரோட்டில் அதிகாலையில் கார் விபத்தில் 2 இளம்பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement