தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குலதெய்வ வழிபாட்டிற்காக அழகர்கோவிலுக்கு 18 கிராம மக்கள் மாட்டுவண்டி பயணம்

காரைக்குடி : அழகர்கோவில் ஆடி திருவிழாவிற்காக, காரைக்குடி அருகே வேலங்குடி உட்பட 18 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மாட்டு வண்டியில் பயணத்தை துவக்கினர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர், வேலங்குடி உள்பட 18 கிராமங்களை சேர்ந்த நாட்டார்கள் தங்களின் குலதெய்வ வழிபாட்டிற்காக அழகர்கோவிலுக்கு பராம்பரியம் முறைப்படி பழமை மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணத்தை துவங்கினர்.

மதுரை அழகர்கோவிலில் ஆடித்திருவிழா துவங்கியவுடன் வேலங்குடியில் உள்ள நாட்டார்களுக்கு திருஓலை அனுப்பப்படுகிறது. இதனைத்தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டிற்கு என உள்ள மாட்டுவண்டிகளில் காளைகளை பூட்டி, நேற்று வேலங்குடி பிள்ளையார்கூடத்தில் இருந்து 18 வண்டிகளில் 7 நாள் பயணத்தை துவங்கினர். இவர்கள் குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர் வழியாக எஸ்.எஸ்.கோட்டை செல்வார்கள். இரவு அங்கு தங்கிவிட்டு இன்று (ஆக.6) பயணத்தை துவங்கி மதுரை மாவட்டம், மேலூரில் தங்குவார்கள்.

நாளை அழகர்கோவில் சென்றடைவர். அங்கு தீர்த்தமாடி விட்டு மறுநாள் 18ம் படி கருப்பண்ணசாமிக்கு கிடாவெட்டி படையல் இடுவார்கள். குலதெய்வ வழிபாடு முடிந்து மீண்டும் மாட்டு வண்டியில் பயணத்தை துவங்கி சொந்த ஊர் திரும்புவார்கள்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘பாரம்பரியம் மாறாமல் பல தலைமுறைகாளாக இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். 7 நாள் உறவினர்களுடன் சேர்ந்து பயணம் செய்கிறோம். குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்ற வெளிநாடுகளில் உள்ளவர்களும் வந்து விடுவார்கள்’’ என்றனர்.