தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மார்த்தாண்டத்தில் நாளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 17வது மாநில மாநாடு தொடக்கம்

* கேரள முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்பு

Advertisement

மார்த்தாண்டம் : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 17வது மாநில மாநாடு நாளை (24ம் தேதி) துவங்குகிறது. கேரள முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்கிறார். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடக்கிறது.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொது செயலாளர் ராதிகா நேற்று குழித்துறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 17வது மாநில மாநாடு நாளை முதல் 27ம் தேதி வரை, நான்கு நாட்கள் மார்த்தாண்டம் கேகேஎம் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

முதல் நாளான நாளை மாலை 4 மணிக்கு, படந்தாலு மூட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடக்கிறது.

பேரணியை அகில இந்திய துணை தலைவர் சுதா சுந்தரராமன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பேரணி, திருத்துவபுரம், கல்லுக்கெட்டி, குழித்துறை ஜங்ஷன் வழியாக குழித்துறை வந்தடைகிறது.மாலை 6 மணிக்கு குழித்துறை பொருட்காட்சி திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

மாநில துணை செயலாளர் உஷா பாசி தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ் வரவேற்கிறார். கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்று பேசுகிறார். இரண்டாவது நாளான 25ம் தேதி, பொது மாநாடு நடக்கிறது. மாநில துணைத்தலைவர் மல்லிகா கொடியேற்றுகிறார்.

மத்திய குழு உறுப்பினர் பொன்னுத்தாய், அகில இந்திய தலைவர் ஸ்ரீமதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 26ம் தேதி அறிக்கை மீது பிரதிநிதிகள் விவாதம் நடக்கிறது. மதியம் குழு விவாதம் நடக்கிறது. 580 பிரதிநிதிகள் மாநில அளவில் பங்கேற்கின்றனர். 27ம் தேதி மாநாட்டு மலரை அகில இந்திய தலைவர் ஸ்ரீமதி வெளியிடுகிறார். தனலட்சுமி பெற்றுக்கொள்கிறார்.

போதை பழக்கத்தை தடுத்து நிறுத்த, மதுபான கடைகளை குறைக்க வேண்டும். பொதுமக்கள், பெண்கள் நடமாடும் பகுதியில் உள்ள மது கடைகளை மூட வேண்டும். இது குறித்து நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் மாநாட்டில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.

இந்த மாநாடு திருப்புமுனை மாநாடாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாதர் சங்க மாநில தலைவர் லாவண்டினா, மாநில துணைச்செயலாளர் உஷா பாசி, முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஜூலியட் மெர்லின் ரூத், குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, லலிதா, ஜெலிலா ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement

Related News