ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்!
Advertisement
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement