தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெளிநாடு சென்ற மேலாளர் வீட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டு

Advertisement

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளிநாடு சென்றபோது பூட்டியிருந்த தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (40). இவர், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சிங்கப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றுள்ளார். இந்நிலையில், 10 நாட்களுக்கு பிறகு நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார்.

பின்னர், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து கதிர்வேல் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்டு அந்த வீட்டினை ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement