தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் கி.பி. 14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

ஆற்காடு : ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் கி.பி.14ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு மற்றும் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்பானை, மரத்துண்டு ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் ஞானக்கொல்லிமேடு பகுதியில் பழங்கால கல்வெட்டு மற்றும் பெருங்கால்மேடு பகுதியில் பழமையான மண் பானை ஆகியன இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து, ஆற்காடு தாசில்தார் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராமு, விஏஓக்கள் ராஜேஷ், முத்துக்குமார், வெங்கடேசன் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்குள்ள பாலாற்றில் கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு கி.பி.14ம் நூற்றாண்டை சேர்ந்தது என கூறப்படுகிறது. அதேபோல், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கால்மேடு பகுதியில் உள்ள பாலாற்றில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்பானை மற்றும் மரத்துண்டு ஆகியன கிடைத்துள்ளது. அவற்றை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளார்.

தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அங்கு சென்று அந்த பழங்கால பொருட்களை கைப்பற்றினர். தொடர்ந்து, பழங்கால கல்வெட்டு, மண்பானை மற்றும் மரத்துண்டு ஆகியவற்றை ஆற்காடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த பழங்கால பொருட்கள் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். ஏற்கனவே சக்கரமல்லூர் கலங்கல் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த மாதம் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News