தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பை உயர் நீதிமன்றத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் உறவினர் உட்பட 14 நீதிபதிகள் பதவியேற்பு

 

Advertisement

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு 14 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதற்கு ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இவர்களது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார். இந்த நியமனங்களுக்கான அனைத்து செயல்முறைகளும் விரைவாக முடிக்கப்பட்டு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 14 புதிய நீதிபதிகளும் பதவியேற்றுக்கொண்டனர். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் பதவியேற்பது மும்பை உயர் நீதிமன்ற வரலாற்றில் அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய நியமனங்களின் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், அனுமதிக்கப்பட்ட 94 என்ற எண்ணிக்கையை விட 12 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. பதவியேற்றவர்களில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் உறவினரான ராஜ் வகோடேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பெண் நீதிபதியான வைஷாலி பாட்டீல்-ஜாதவ் நியமனத்தின் மூலம், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. புதிய நீதிபதிகளில் பலர் மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. ஆகியவற்றின் சார்பில் வழக்குகளில் ஆஜரான அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement