ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!
Advertisement
அப்போது அங்கு வந்த இலங்கை கட்டற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். மேலும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நேற்று முன் தினம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளுடன் 21 மீனவர்களைச் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். தொடர்ச்சியாக இலங்கை கடற்படை கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தமிழக மீன்வர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Advertisement