தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தாண்டு இறுதியில் தேர்தல் வர உள்ளதால் அதிரடி; பீகாரில் 125 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

Advertisement

பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் வீடுகளுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைகிறது. இதனால், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் இறங்கி உள்ளன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ (எம்எல்) லிபரேஷன் உள்ளிட்ட பல கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

அதேநேரத்தில், இந்த சவாலை சமாளிக்கவும், ஆட்சியை மீண்டும் தக்கவைக்கவும் நிதிஷ்குமார் பல திட்டங்களை தீட்டி வருகிறார். இந்நிலையில் பீகாரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் இன்று காலை அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘பீகார் மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க எனது அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும். அதாவது, ஜூலை மாத கட்டணத்தில் 125 யூனிட் வரை பயன்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால், மொத்தம் 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.

குதிர் ஜோதி திட்டத்தின் கீழ், மிக ஏழை குடும்பங்களுக்கு சூரிய மின் தகடுகளை அமைப்பதற்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கும். இதனால், அந்த வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் வராது. அதே நேரத்தில், சூரிய ஒளி மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள், 10,000 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News