ஹத்ராசில் 121 பேர் பலியான விவகாரம்; 119 பேரிடம் வாக்குமூலம் பதிவு: 300 பக்க அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு
Advertisement
அந்த குழு தனது 300 பக்க அறிக்கையில் 119 பேரிடம் வாக்குமூலங்களை பெற்று பதிவு செய்துள்ளது. கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஹத்ராஸ் கலெக்டர் ஆஷிஷ் குமார், எஸ்பி நிபுன் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகளின் வாக்குமூலமும் இதில் அடங்கும். இதுதவிர, இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்டிஐ தனது அறிக்கையை மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்திடம் அளித்துள்ளதாகவும், ஹத்ராஸ் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்தும், அலட்சியங்கள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement