தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹத்ராசில் 121 பேர் பலியான விவகாரம்; 119 பேரிடம் வாக்குமூலம் பதிவு: 300 பக்க அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

லக்னோ: ஹத்ராசில் 121 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 119 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்த எஸ்ஐடி, தனது 300 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. கடந்த 2ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் சூரஜ்பால் என்ற போலே பாபா சாமியார் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற மக்களில், கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். முக்கிய குற்றவாளியான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவ் பிரகாஷ் மதுகர் உட்பட 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் சாமியாரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. 17 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க எஸ்ஐடி பிரிவு ஆக்ரா ஏடிஜிபி அனுபம் குல்ஸ்ரேஸ்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
Advertisement

அந்த குழு தனது 300 பக்க அறிக்கையில் 119 பேரிடம் வாக்குமூலங்களை பெற்று பதிவு செய்துள்ளது. கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஹத்ராஸ் கலெக்டர் ஆஷிஷ் குமார், எஸ்பி நிபுன் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகளின் வாக்குமூலமும் இதில் அடங்கும். இதுதவிர, இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்டிஐ தனது அறிக்கையை மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்திடம் அளித்துள்ளதாகவும், ஹத்ராஸ் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்தும், அலட்சியங்கள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Advertisement

Related News