தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

120 டிகிரி வெயில் கொளுத்துகிறது ஹஜ் யாத்திரையில் 1301 பேர் பலி

கெய்ரோ: சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை சென்றவர்களில் 1301 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனாவிற்கு இந்த ஆண்டு 18.3லட்சம் பேர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். 22 நாடுகளை சேர்ந்த 16லட்சம் பேர் மற்றும் சவுதி குடிமக்கள் மற்றும் அங்கு குடியிருப்பவர்கள் 2,22,000 பேர் இதில் அடங்குவர். இந்த ஆண்டு மெக்காவில் வெயிலின் அளவு வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படுகின்றது. அங்கு 120 டிகிரி வெப்பம் நிலவி வருகின்றது.
Advertisement

இந்நிலையில் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 1301 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் பஹின் பின் அப்துர்ரஹ்டான் அல் ஜலாஜெல் கூறுகையில்,‘‘ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் 1301 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 83சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத பயணம் மேற்கொண்டவர்கள். இவர்கள் மக்கா மற்றும் அதனை சுற்றி ஹஜ் சடங்குகளை செய்வதற்காக நீண்ட தூரம் அதிக வெப்பநிலையில் நடந்து சென்றுள்ளனர். இறந்தவர்களில் பலரிடம் முறையான அடையாள ஆவணங்கள் இல்லை. இதனால் யார் என அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

Advertisement

Related News