தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத உணர்வுகளுக்கு முன்னுரிமை புகார்; விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கு தடை: ஒன்றிய அரசின் முடிவுக்கு கண்டனம்

புதுடெல்லி: விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கான ஒப்புதலை ஒன்றிய வேளாண் அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. கோழி இறகுகள், பன்றி மற்றும் மாடுகளின் திசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உரங்கள், பயிர்களில் பயன்படுத்தப்படுவதற்கு இந்து மற்றும் சமண மதக் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 1985ம் ஆண்டு உரக் கட்டுப்பாட்டு ஆணையைத் திருத்தி, விலங்கு மூலங்களிலிருந்து பெறப்படும் புரத ஹைட்ரோலைசேட்டுகளை நீக்கி, நேற்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மதரீதியான சர்ச்சைகளைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. சோயா, மக்காச்சோளம் போன்ற தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் உயிர் உரங்களுக்குத் தடை இல்லை. அறிவியல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பொருளுக்கு, மத உணர்வுகளைக் காரணம் காட்டி தடை விதிப்பது அபாயகரமான முன்னுதாரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாஜக அரசு, தனது அரசியல் ஆதாயத்திற்காக மத உணர்வுகளுடன் விளையாடுவதாகவும், விவசாயிகளின் நலன்களைப் புறக்கணிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்புதான் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இந்த உரங்களுக்கு அறிவியல் பூர்வமான ஒப்புதல் அளித்திருந்தது.

பல ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத, தரம் குறைந்த உயிர் உரங்கள் சந்தையில் விற்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு கொண்டு வந்த நிலையில், திடீரென தற்போது பின்வாங்கியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News