தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று வர தமிழக படகுக்கு 10 ஆண்டாக அனுமதி தராமல் நிறுத்திவைப்பு: கேரள போலீசாருக்கு 3வது படகுக்கு அனுமதி

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பணிக்காக கேரள போலீசாருக்கு, ஏற்கனவே 2 படகுகள் உள்ள நிலையில், மேலும் ஒரு படகு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 10 ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல், தமிழன்னை படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இங்கு கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலாப்பயணிகளுக்காக 8 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர அணை பாதுகாப்பு பணிக்காக கேரள போலீசாருக்கு ஏற்கனவே 2 படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 150 குதிரை திறன் (ஹார்ஸ் பவர்) சக்தி கொண்ட மேலும் ஒரு புதிய படகு கேரள போலீசாருக்கு வழங்கப்பட்டது.
Advertisement

தேக்கடி ஏரியில் இந்த படகை இடுக்கி எஸ்பி விஷ்ணு பிரதீப் இயக்கி துவக்கி வைத்தார். முன்னதாக, தமிழக பொதுப்பணித்துறை சார்பில், பராமரிப்பு பணிக்காக அணைக்கு செல்வதற்கு படகுகளை இயக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2014ல் ரூ. 1 கோடி மதிப்பில் 2 பைபர் படகுகள் வாங்கப்பட்டன. இதில், ஒரு படகிற்கு தமிழன்னை என்று பெயர் சூட்டப்பட்டு தேக்கடி ஏரியில் இருந்து இயக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், கேரள வனத்துறை பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுத்துவிட்டது. 10 ஆண்டுகளாக தமிழன்னை படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கேரள காவல்துறைக்கு மூன்றாவது படகிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Related News