முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று வர தமிழக படகுக்கு 10 ஆண்டாக அனுமதி தராமல் நிறுத்திவைப்பு: கேரள போலீசாருக்கு 3வது படகுக்கு அனுமதி
Advertisement
தேக்கடி ஏரியில் இந்த படகை இடுக்கி எஸ்பி விஷ்ணு பிரதீப் இயக்கி துவக்கி வைத்தார். முன்னதாக, தமிழக பொதுப்பணித்துறை சார்பில், பராமரிப்பு பணிக்காக அணைக்கு செல்வதற்கு படகுகளை இயக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2014ல் ரூ. 1 கோடி மதிப்பில் 2 பைபர் படகுகள் வாங்கப்பட்டன. இதில், ஒரு படகிற்கு தமிழன்னை என்று பெயர் சூட்டப்பட்டு தேக்கடி ஏரியில் இருந்து இயக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், கேரள வனத்துறை பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுத்துவிட்டது. 10 ஆண்டுகளாக தமிழன்னை படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கேரள காவல்துறைக்கு மூன்றாவது படகிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement