தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4ம் தேதி வெளியாகிறதா?

சென்னை: நடப்பாண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை நவம்பர் 4ம் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில்தான் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால் 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு கால அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி பெற்று, தேர்வுக்கால அட்டவணையை நவம்பர் 4ம் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மேலும், சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளதால், அதை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

Advertisement