ரெட்டியார்சத்திரம் அருகே தெருநாய் கடித்து 10 ஆடுகள் பலி
Advertisement
ஆனால், நாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் இறந்தன. மேலும், 7 ஆடுகள் பலத்த காயமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த நடுப்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், சுள்ளறும்பு கால்நடை மருத்துவர் தேவராஜ், உதவியாளர் கமலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பலியான ஆடுகளை பார்வையிட்டனர். உயிரிழந்த ஆடுகள் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தெருநாய் கடித்ததால் 10 ஆடுகள் பலியான நிலையில் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் முனியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement