தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோயிலுக்கு சென்று திரும்பிய 10 பக்தர்கள் விபத்தில் பரிதாப பலி: ராஜஸ்தானில் சோகம்

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஷ்யாம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பக்தர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற காட்டு ஷ்யாம் கோயிலுக்கு சென்றுவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு பக்தர்கள் குழுவாக திரும்பிக் கொண்டிருந்தனர். பயணிகளுக்கான பிக்கப் வாகனத்தில் பக்தர்கள் பயணித்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் பிக்கப் வாகனத்தின் மீது, எதிர்திசையில் வேகமாக வந்த லாரி ஒன்று பயங்கரமாக மோதியது.

இந்த கோரமான மோதலில், பிக்கப் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியதில், அதில் பயணம் செய்தவர்களில் 10 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாகர் ராணா கூறுகையில், ‘காட்டு ஷ்யாம் கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும், காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயர் சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கும், மூன்று பேர் உள்ளூர் மாவட்ட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றார்.