தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

12 வயது மாணவி பலாத்காரம்; கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Advertisement

திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே கராத்தே படிக்க வந்த 12 வயது மாணவியை பலாத்காரம் செய்த மாஸ்டருக்கு 110 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ2.75 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் மோகனன் (51). கராத்தே மாஸ்டரான இவர் அப்பகுதியில் ஒரு கராத்தே பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கராத்தே பயின்று வருகின்றனர். இந்நிலையில் மோகனனிடம் கராத்தே படிக்க வந்த 12 வயது மாணவியிடம் கராத்தே சொல்லிகொடுக்கும்போது நெருக்கமாக பழகியுள்ளார்.

பின்னர் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் முண்டக்கயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து மோகனனை கைது செய்தனர்.  இந்த வழக்கு ஈராற்றுபேட்டை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஷன் தாமஸ், கராத்தே மாஸ்டர் மோகனனுக்கு 110 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ2.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News