தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 வளர்ப்பு நாய்களை வேட்டையாடிய அட்டகாச சிறுத்தையை பிடிக்க கூண்டு

ஊட்டி : ஊட்டி கிளன்ராக் பகுதியில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கார்டன் மந்து பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது.

Advertisement

இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இதேபோல், மாவட்டத்தின் தலைநகரமாக விளங்க கூடிய ஊட்டி நகரத்தை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்துள்ளன.

இந்த வனங்களில் இருந்து வெளியேறும் காட்டு மாடுகள், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நகருக்குள்ளும், புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கை. வனத்துறையினர் அவற்றை வனத்திற்குள் விரட்டுவார்கள்.

உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளான நாய், கோழி உள்ளிட்டவற்றை வேட்டையாடி செல்வது வழக்கம். மான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதை காட்டிலும், நாய் போன்றவற்றை வேட்டையாடுவது சுலபம் என்பதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதனிடையே, ஊட்டி நகரின் பல்வேறு இடங்களிலும் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே கிளன்ராக் பகுதி உள்ளது. இப்பகுதி வனத்தை ஒட்டி அமைந்துள்ளது.

அருகில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தை ஒன்று இப்பகுதியில் குடியிருப்புகளில் வளர்க்கப்படும் விலை உயர்ந்த நாய்களை வேட்டையாடி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட நாய்களை வேட்டையாடியுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அருகேயுள்ள கார்டன்மந்து பகுதியில் தோடர் வளர்ப்பு எருமை கன்றுகளையும் வேட்டையாடியதாக தெரிகிறது. தொடர் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறை சார்பில் கார்டன்மந்து பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கூண்டின் ஒருபகுதியில் ஆடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. கூண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Advertisement

Related News