தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணமான பெண்களை பணியமர்த்த மறுக்கும் FOXCONN நிறுவனம்.. தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் ஒன்றிய அரசு

சென்னை : FOXCONN தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு தமிழ்நாடு அரசை ஒன்றிய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்புதாக செய்தி வெளியானது.
Advertisement

இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்த வித பாகுபாடும் காட்டக்கூடாது என 1976ல் சம ஊதியச் சட்டம் 5வது பிரிவு தெளிவாக எடுத்து உரைப்பதாகவும் இந்த சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால் அதனிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மண்டல தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே திருமணம் ஆகாத பெண்களை விட திருமணமான பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு உட்பட குடும்ப பொறுப்புகள் அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் பணியில் சுணக்கம் ஏற்படும் என கருதி வேளைக்கு அமர்த்துவதில்லை என ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முன்னாள் மனித வள அதிகாரி ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News