தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முகத்தில் முகம் பார்க்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் முகத் தின் அழகை பாதுகாத்து வசீகரமாய் திகழ்வது மிகமிக முக்கியம். தன்னை நாகரீகமாகவும், கவர்ச்சியாகவும் அலங்கரித்துக் கொண்டாலும் முகத்தை அழகாக இருக்கச் செய்தால் அதன் அழகே தனிதான். அதற்கு சில எளிய முறைகளை கடைப்பிடித்தால் முக அழகுடன் வலம் வரலாம்.

*இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

*பாலேட்டை முகத்தில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு, முகம் கழுவினால் முகம் மென்மையுடன் பிரகாசமாக இருக்கும்.

*பாலுடன் சில துளிகள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் ேசர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவுடன் விளங்கும்.

*வாழைப்பழத்தை கூழாக்கி அதனுடன் தேனைக் கலந்து பூசி ஊறவைத்து கழுவிவர முகம் பளபளப்பாகும்.

*தக்காளிப் பழத்தை இரண்டாக நறுக்கி, முகத்தில் தேய்த்து, ஊறவைத்து, முகம் கழுவினால் முகம் பளபளப்பாக காட்சி தரும்.

*வெள்ளரிச் சாறை முகத்தில் தடவி, ஊறவைத்து பின்பு முகம் கழுவினால் பளீரென்று பிரகாசிக்கும்.

*பாலுடன் எலுமிச்சை சாறைக் கலந்து, அத்துடன் சிறிதளவு சர்க்கரையையும் கலந்து முகத்தில் பூசி, அரைமணி நேரம் கழித்து வெந்நீரினால் முகம் கழுவினால் முகம்

பிரகாசிக்கும்.

*பாதாம் பருப்பை ஊறவைத்து, தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து, கழுவினால் முகம் நல்ல நிறமாக மாறிவிடும்.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

Related News