தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பனிக்கால சரும பாதுகாப்பு

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக பனிக் காலத்தில் சருமம் வறண்டு செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதட்டுப் பகுதியில் சருமம் வறண்டு வெடிப்பதால் சருமம் பொலிவிழந்த தோற்றம் அளிக்கும். இந்தப் பிரச்னைகளிலிருந்து உங்கள் முகத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்...

* பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறுப் பிழிந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறியப் பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவும் பெறும்.

* பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிப்பதும் சருமத்தை மென்மையாக்கும்.

* வறண்டச் சருமம் கொண்டவர்கள் பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

* எல்லா வகை சருமத்தினரும் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

* ½ கிலோ துவரம் பருப்பு, 100 கிராம் பாசிப்பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1 மாதம் செய்து வந்தால் தோலின் வறட்சி தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.

* பனிக் காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

* பனிக் காலத்தில் உடலுக்குப் பயத்தம் மாவு, கடலை மாவு தேய்த்துக் குளிக்கக் கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச எண்ணெய் பசையையும் உறிஞ்சிவிடும்.

* மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்புப் போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வர வேண்டும்.

தொகுப்பு: எஸ்.செசிலியா, கிருஷ்ணகிரி.

Related News