தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்றாட பயன்பாட்டுக்கான குறிப்புகள்

Advertisement

நன்றி குங்குமம் தோழி

சேலை: கலர் சேலைகளை முதலில் உப்பு கலந்த நீரில் அலசி விட்டு பின்பு சோப்பு நீர் கொண்டு துவைத் தால் நிறம் மங்காது.

அரிசி: பூச்சி, வண்டு இவை வராமல் பாதுகாக்க அரிசி வைத்துள்ள பாத்திரத்தில் கொஞ்சம் வேப்பிலை போட்டு வைக்கவும்.

வெண்ணெய்: பாலை சிறு தீயில் காய்ச்சி பின்பு ஆற வைத்து மேலே அடை தங்கும் போது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். சில மணி நேரத்திற்கு பின்பு பாலிலிருந்து ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். இவ்வாறு சேகரித்த ஆடையை கடைந்து வெண்ணெய் எடுக்கலாம். மிக்சியிலும் அடிக்கலாம்.

துரு கறை: வெள்ளைப் பருத்தி அல்லது மற்ற ஆடைகளில் துரு கறை படிந்தால் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து அந்தப் பகுதியை துடைத்து வெயிலில் காய விடவும்.

கலப்பட தேன்: தண்ணீரில் இரண்டு சொட்டு தேனை விட்டால், அது தண்ணீரில் கலக்காமல் முத்து மாதிரி மிதந்தால், கலப்படமற்ற தேன்.

மருத்துவக் குறிப்புகள்: சீதபேதிக்கு புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் இவைகளை சம அளவு இடித்து விட்டு தூளாக்கி பசும் பாலில் கலந்து சாப்பிட சீதபேதி குணமாகிவிடும்.

வாய் திக்கல்: சிலருக்கு பேசும் போது திக்கும். அவர்கள் வில்வ இலை இரண்டை தினந்தோறும் காலைப் பொழுதில் மென்று வர நற்பலன் கிடைக்கும். இலந்தை இலை சாறும் குடிக்கலாம்.

மலச்சிக்கல்: வாரத்தில் ஒருநாள் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிடலாம். இரவில் மாம்பழம் சாப்பிட இதற்கு தீர்வு கிடைக்கும்.

பல்வலி, பல் கூச்சத்திற்கு: பல் வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு மெல்லவும். பல் கூச்சத்திற்கு புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை தூள், உப்பு சேர்த்து பல் துலக்கலாம்.

தலைவலி: அகத்தி இலைச்சாறு நெற்றியில் தடவலாம். ஒற்றைத் தலைவலியாக இருந்தால் எட்டி மரக் கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து தலைக்கு குளிக்கலாம். சுக்கை இடித்து நெற்றியில் பற்று போடலாம்.

நீர்கடுப்பு: நன்னாரி வேர் 5 கிராம் அரைத்து பசும் பாலில் கலந்துண்ண நீர் கடுப்பு அகன்று விடும்.

- கீதா சுப்பிரமணியன், கும்பகோணம்.

Advertisement

Related News