தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஃப்ரிட்ஜில் தர்பூசணிக்கு இடமில்லை

Advertisement

நன்றி குங்குமம் தோழி

கோடை காலம் தொடங்கிவிட்டது. நீரோட்டமாக இருக்க வேண்டும். உடல் தாகத்தை தணிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக நாம் பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வோம். அது தவறில்லை. ஆனால் சில பழ வகைகளை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது மிகப்பெரிய ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும்.

நம் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பிஸ்கெட், சாக்லேட், காய்கறிகள், பால், தயிர் என எதையெல்லாம் வைக்க முடியுமோ அதை எல்லாம் வைத்து விடுகிறோம். அதே போல்

தர்பூசணி பழத்தினை வாங்கி பாதி சாப்பிட்டு மீதி இருப்பதை நாம் ஃபிரிட்ஜில்தான் வைக்கிறோம். அவ்வாறு வைப்பதால் நம் உடலுக்கு எவ்வளவு பெரிய தீங்குகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இந்த தர்பூசணி மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், தர்பூசணியை வெட்டி ஒரு பகுதியை சாப்பிட்டு விட்டு மீதிப் பகுதியை ஃப்ரிட்ஜில் வைத்து சில மணி நேரங்கள் கழித்து சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடுவதால் பல ஆபத்துகள் வருகின்றன. குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் தர்பூசணியின் ஊட்டச்சத்துக்கள் குறைகிறது. இதனால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தர்பூசணியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது தொற்று அபாயத்தை ஏற்படுத்தும்.

குளிர்ந்த தர்பூசணியில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். வயிறு பிரச்னைகள் மற்றும் செரிமான பிரச்னைகள் ஏற்படும். மேலும், தர்பூசணி மிகவும் குளிர்ச்சி என்பதால் இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் நமக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல ஆபத்துகள் காத்திருக்கின்றன. ஆகையால் இனி அதை தவிர்த்து விடுங்கள்... அதுவே உங்கள் ஆரோக்கியத்திற்கு அழகு.

தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

 

Advertisement