தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சமையலறையே ஒரு மருந்தகம்!

நன்றி குங்குமம் தோழி

உணவே மருந்து என்பது போல் நாம் நம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. இவை பல நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அவை என்ன மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

சீரகம்: வைட்டமின் ஏ, சி சத்துக்கள் கொண்டவை. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவிலோ, தனியாகவோ சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. பித்தத்தைத் தணித்து பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திட உதவும்.

வெந்தயம்: இரும்பு, கால்சியம் சத்துக்கள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மையைத் தரக்கூடியது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவைத் தடுக்கும். தாய்ப்பாலைப் பெருக்கும்.

மிளகு: இதய நோய், ரத்தக்கொதிப்பு, மூச்சுத்தொல்லை, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் உணவில் மிளகாய்க்குப் பதில் மிளகை சேர்த்துக்கொண்டால் நோயின் தன்மை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் நீக்கிவிடும்.

பூண்டு: வைட்டமின் சி, ஏ நிறைந்ததாகும். பாலில் பூண்டு, தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டம் தரவல்லது. வாயுப்பிடிப்பை நீக்கும்.

சோம்பு: இதில் உப்புச்சத்து உள்ளது. குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக்கும் தன்மை கொண்டது.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.