தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடையும் தலைமுடி பராமரிப்பும்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

கோடையில் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தலைமுடியின் க்யூட்டிகளை சேதப்படுத்தும். இதனால் ஈரப்பதம் குறைந்து, முடி வறண்டு, உடைவதற்கு வாய்ப்புள்ளது. கோடையில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை காரணமாகவும் தலைமுடி உதிர வாய்ப்புள்ளது. சூரியனின் தாக்கத்தில் இருந்து தலைமுடியைப் பாதுகாக்க வெளியே செல்லும் போது தொப்பியை அணியுங்கள். தொப்பியை அணியும் முன்பு தலையை மெல்லிய துணியினால் கட்டிக்கொண்டு பிறகு தொப்பியினை அணியலாம். அல்லது ஸ்கார்ஃப் அணிவதாலும் தலைமுடிக்கு முழு பாதுகாப்பை வழங்க முடியும்.

புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து தலைமுடியினை பாதுகாக்க பல முடி பராமரிப்பு பொருட்கள் உள்ளன. அதனை தலைமுடிக்கு ஏற்ப பயன்படுத்தலாம். கோடை காலத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் தேவை. தலைக்கு அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் அகன்று தலைமுடி மேலும் உலர்ந்துப் போக வாய்ப்புள்ளது. வாரத்தில் 2-3 முறை கண்டிஷனிங் பயன்படுத்தி தலைமுடியினை அலசுவது நல்லது.

கோடையில் சருமம் மட்டுமில்லை தலைமுடியையும் நீரேற்றமாக வைப்பது அவசியம். நிறைய தண்ணீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. சூரிய ஒளியில் வெளிப்படும் போது தலைமுடி நுனியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க பின்னல், குதிரைவால் அல்லது பன் கொண்டை என சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.

ப்ளோ ட்ரையனர்கள், ஸ்ட்ரைட்டனர்கள் மற்றும் நிறங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இது தலைமுடியினை சேதப்படுத்தும். அதற்கு பதில் இயற்கை முறையிலான சிகை அலங்காரங்களை முயற்சிக்கலாம். நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் கலக்கப்பட்ட தண்ணீரால் நீச்சல் பயிற்சி எடுப்பவர்களின் தலைமுடி பாதிக்கப்படும். அதற்கென மார்க்கெட்டில் உள்ள ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துங்கள்.

தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களால் மசாஜ் செய்வது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்கும். சில துளி லாவெண்டர் எண்ணெயினை அத்தியாவசிய எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

கோடையில் தலைமுடிக்கு கலரிங் செய்வதை தவிர்க்கவும். முடி ஆரோக்கியமாக இருக்க கலரிங் செய்யப்பட்ட முடிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது அவசியம்.

உலர் தலைமுடி உள்ளவர்கள் ஆழமான கண்டிஷனிங் மாஸ்க் பயன்படுத்துவது சிறந்தது. இது முடி உதிர்வதை கட்டுப்படுத்தி, முடிக்கு ஊட்டமளிக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கோடையில் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கலாம்.

Advertisement

Related News