தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தையல் இயந்திர பராமரிப்பு

தையல் இயந்திரம் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருள். அதனை முறையாக பராமரிப்பது அவசியம்.

*தையல் இயந்திரம் தொடர்ந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. முடியாத போது 15-20 நாட்களுக்கு ஒருமுறை துடைத்து, பெடல் செய்தால் நீண்ட காலம் உழைக்கும்.

*தடிமனான துணிகளை தைப்பதற்கு முன்பாக இயந்திரத்திலுள்ள ஊசியில் சோப் அல்லது மெழுகு தடவினால் ஊசி உடையாது.

*தையல் மெஷின் பெல்ட் கூடுதல் நீளமாக இருந்தால், குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் வெயிலில் காயவைத்தால் சரியாகிவிடும்.

*ஊசியில் நூல் கோர்க்க, நூலின் நுனியை சோப், மெழுகு தடவி கோர்த்தால் எளிதாக இருக்கும்.

*ஆடைகளில் ஜிப் வைத்து தைப்பதற்கு முன் செல்லோடேப் கொண்டு ஒட்டிவிட்டு தைத்தால் தையல் நேராக வரும்.

*பாபின் துருப்பிடிக்காமல் இருக்க உள், வெளிப் பக்கமும் லேசாக நெயில் பாலீஷ் தடவலாம். நூல் சிக்காமல் இருக்கும்.

*உப்பு காகிதத்தை கத்திரிக்கோலால் பலமுறை வெட்டினால் மழுங்கிய கத்திரி கூர்மையாகும்.

*தையல் பொருட்கள் வைக்கும் பெட்டியில் சிறிய காந்தத் துண்டு வைத்தால் ஊசி, ஊக்கு தரை அல்லது சோபாவில் விழுந்தால் எடுக்க சுலபமாக இருக்கும்.

*இயந்திரத்திற்கு எண்ணெய் போடுவதற்கு முன் நூல் அழுக்குகளை பெயின்ட் பிரெஷ்ஷால் எடுத்த பின்புதான் போட வேண்டும்.

*எண்ணெய் போட்ட பின், உடனே நல்ல துணிகளை தைக்காமல், ஒரு பழைய துணியில் ஓட்டி பார்த்துவிட்டு தைப்பது நல்லது.

*உபயோகப்படுத்தாத போது மெஷினை மூடி வைத்தால் நீண்ட நாள் உழைக்கும்.

- சீனு சந்திரா, சென்னை.