தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மருதாணி சிவக்க... சிவக்க...

நன்றி குங்குமம் தோழி

மருதாணி கையில் சிவப்பான நிறத்தில் இருக்க என்ன செய்யலாம்...

*சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாறை மருதாணியின் மீது தடவினால், விரைவில் காய்ந்து விடாமல் நீண்ட நேரத்திற்குகையில் ஒட்டிக் கொண்டு இருப்பதால், நல்ல சிவப்பு நிறத்தை தரும்.

*நான்கு கிராம்புகளை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை மருதாணி பேஸ்ட் கலக்க பயன்படுத்தினால், நல்ல சிவப்பு நிறம் கிடைக்கும்.

*கைகள் மற்றும் கால்களில் இடும் மருதாணிகளை தண்ணீரைக் கொண்டு கழுவக்கூடாது. உங்கள் கையில் மருதாணி நல்ல சிவப்புடன் இருக்க வேண்டும் என்றால் கடுகு எண்ணெயை கையில் தடவி மருதாணியை நீக்கலாம். கடுகு எண்ணெய் இல்லை என்றால் யூகலிப்டஸ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

*கைகளில் மருதாணியை இட்ட பிறகு அதில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் தண்ணீரைத் தொடக்கூடாது.

*மருதாணியை நீக்கிய பிறகு கையில் சிறிது நேரம் எண்ணெயை தடவி வைக்க வேண்டும். இது போன்ற நடைமுறைகளை செய்தாலே கைகளில் மருதாணி செக்கச் சிவப்பாக நிச்சயம் பிடிக்கும். மருதாணி இடுவது அழகுக்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

*ரத்தப்போக்கினை தடுத்து மாதவிடாய் பிரச்னையை சரி செய்கிறது.

*கால்களில் பித்த வெடிப்பை வரவிடாமல் கால்களை பாதுகாக்கிறது.

*உடல் உஷ்ணத்தை குறைத்து உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் வரவிடாமல் தடுக்கிறது.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Related News