தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாசகர் பகுதி - வெயிலில் கண்களை பாதுகாக்க...

நன்றி குங்குமம் தோழி

* கண்கள் பளபளப்பாகவும், பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விடலாம்.

* இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெயை வாரம் ஒருமுறை கண்களில் விட்டு வர பிரகாசமாக இருக்கும்.

* பாதாம் பருப்பினை பாலுடன் சேர்த்து அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கருவளையும் மறையும்.

* சந்தனக் கல்லில் சாதிக்காயை அரைத்து இரவில் பூசி வந்தால் கருவளையம் விரைவில் மறையும்.

* வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும், கண்களை சுற்றியும் பேக் போட்டால், கண்களுக்கு குளிர்ச்சி.

* கண்களின் இமைகளில் ஏற்படும் கட்டியை போக்க துளசி இலைச் சாற்றை பூசலாம்.

* தேயிலைத் தூளை கொதிக்க வைத்து வெள்ளைத் துணியை அதில் நனைத்து கண்களின் மேல் வைத்தால் கருவளையம் நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.

* கருஞ்சீரகத்தில் 100 கிராம் நல்லெண்ணை சேர்த்து புகை வரும் அளவிற்கு காய்ச்சி கண்ணின் மேலும் சுற்றியும் தேய்த்துக் கழுவினால் கண் எரிச்சல் நீங்கும்.

* திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகையளவு எடுத்து ஒரு கப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளி வீசும்.

* உருளைக்கிழங்கை அரைத்து கண்களை சுற்றியும் கண்களின் மேலும் பேக் போட கருவளையங்கள் மறையும்.

* கண்களை இடது-வலதாக, மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5 முறை செய்து, கண்களை இறுக்கமாக மூடித் திறக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும். இது கண்களுக்கான சிறந்த பயிற்சி.

* நந்தியாவட்டை பூவை பறித்து நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டி வர கண்கள் பிரகாசமாகும்.

* கண்களை தினமும் பன்னீரால் துடைக்க கண்கள் புதுப்பொலிவு பெறும்.

* அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்தால் முகச்சோர்வு நீங்கும்.

* கோடை காலத்தில் பாதிக்கப்படுவது கண்தான் செல்போனை குறைந்த அளவுக்கு பயன்படுத்துவோம்.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

Related News