தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாசகர் பகுதி- தலை முடி பராமரிப்பு

Advertisement

நன்றி குங்குமம் தோழி

* நீராகாரம் எனப்படும் பழைய சோற்றின் தண்ணீரால் தலைக்கழுவி வந்தால் தலைமுடி கருகருவென பளபளக்கும்.

* விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

* சந்தனக் கட்டையை பற்ற வைத்துப் புகையை தலையில் காட்டினால் பேன் தொல்லையை கட்டுப்படுத்தலாம்.

* இளவயது நரைக்கு இலந்தை மர இலைகளை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர, நரை விலகும்.

* தாமரைப்பூவை கஷாயம் செய்து தினம் இரண்டு வேளை என தொடர்ந்து பருகி வர, இளநரை விலகும்.

* உளுந்து மாவை தலையில் பூசிய பின் சீயக்காய் தூள் உபயோகித்து தலைக்குளித்தால் தலைமுடியில் அதிகம் உள்ள எண்ணெய் தன்மை நீங்கிவிடும்.

* ஒரு கப் தேநீர் டிக்காஷனில் ஒரு டீஸ்பூன் உப்பும் சேர்த்து தினமும் தலை கழுவி வந்தால் இளம் நரையை பெருமளவுக்கு தடுத்துவிடலாம்.

* சாம்பார் வெங்காயத்தின் சாற்றைப் பிழிந்தெடுத்து தலையில் அழுத்தித் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் தலைமுடி உதிர்வதை முற்றிலுமாக தடுக்கலாம்.

* நான்கு நெல்லிக்காயை எடுத்து நன்றாக நசுக்கி பாலிலிட்டு ஊற வைத்து, மறுநாள் அந்த புளித்த பாலை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து கழுவினால், வாரத்தில் மூன்று

முறை இவ்வாறு செய்தால் தலைமுடி வேகமாக வளரும்.

தொகுப்பு: டி.லதா, நீலகிரி.

Advertisement

Related News