தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அன்னாசிப்பழ அழகுக் குறிப்புகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த அன்னாசிப்பழம் உடலுக்கு சத்துகளை வழங்குவது போன்றே, சரும பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகிறது. அவற்றை பார்ப்போம்.

சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 தேக்கரண்டி தேங்காய்ப்பாலுடன், ஒரு தேக்கரண்டி அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒருநாள்விட்டு ஒருநாள் முகத்தில் பூசி கழுவி வர, அறுபதிலும் இளமையாய் இருக்கலாம்.தலைமுடியை பாதுகாப்பதுடன் கண்டிஷனராகவும் செயல்படுகிறது. அன்னாசிப்பழ விழுது அரைகப் தேங்காய்ப்பால் இரண்டு தேக்கரண்டி வெந்தயபவுடர் இரண்டு தேக்கரண்டி கலந்து தலையில் தேய்த்து வந்தால், பளபளப்பு கூடுவதுடன் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

முகத்தில் எண்ணெய் வடிந்து அழகு குறைந்து தெரிகிறதா? வாரத்தில் இரண்டு நாள் ஒரு தேக்கரண்டி அன்னாசிப்பழச் சாறுடன் ஒரு தேக்கரண்டி கடலைமாவை கலந்து முகத்தில் பூசி, ஐந்து நிமிடம் கழித்து கழுவி வர, எண்ணெய்ப்பசை நீங்கி, முகம் பொலிவுறும்.கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு. இரண்டு அன்னாசிப்பழ துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து நன்கு அடிக்கவும்.

இந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகப் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவி விடவும். இவ்வாறு செய்ய சுருக்கங்கள் மறைந்து, கழுத்து சங்கு போல் மின்னும்.கூந்தல் வெடிப்பைப் போக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. இரண்டு தேக்கரண்டி பயத்தமாவு, தயிர் எடுத்து கலந்து கொண்டு தலையில் தடவி எக் ஷாம்பூ அல்லது புரோட்டீன் ஷாம்பூ தேய்த்து குளித்து வர, கூந்தல் நுனி வெடிப்பு மாறி, கூந்தல் பளபளப்பாகும்.

வறண்ட உதடுகளுக்கு அன்னாசிப் பழச்சாறு, பீட்ரூட் சாறு இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து இதனுடன் ஐந்து துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு அவ்வப்போது பஞ்சால் ஒற்றி உதடுகளில் தடவி வர, வெடிப்பு, எரிச்சல் மறைவதுடன் இதழ்களும் ஈரப்பதத்துடன் பளபளக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்