தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊறவைத்து பின் சர்க்கரைப்பாகு ஊற்றி கிளறி கேசரி செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

* சர்க்கரைப் பொங்கல் சூடாக இருக்கும் பொழுது அரை கிண்ணம் தேங்காய்ப் பால் ஊற்றி கிளறி இறக்கினால் சர்க்கரை பொங்கல் சுவையாக இருக்கும்.

* தேங்காய் துருவலோடு சிறிது மிளகு, பேரீச்சை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து தயிருடன் சேர்த்தால் சுவையான தேங்காய் பச்சடி தயார்.

- ம.வசந்தி, விழுப்புரம்.

* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பக்கோடா செய்தால் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

* சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

* தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.

* சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

* முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.

* பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

* வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கி அதன் பிறகு குழம்பில் சேர்க்க வேண்டும். இதனால், அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி குழம்பு வழுவழுப்பாக இருக்காது.

- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* கடுகை வாணலியில் வறுத்து வைத்துக்கொண்டால் தாளிக்கும்போது வெடித்து, சிதறாமல் இருக்கும்.

* இட்லி அரிசிக்குப் பதில், ராகி (கேழ்வரகு), கம்பு, சோளம், உளுந்தம்பருப்பு சேர்த்து அரைத்து இட்லி செய்யலாம். உடம்புக்கு நல்லது.

* அவல் உப்புமா செய்யும்போது மலர வேக வைத்த பாசிப்பருப்பு சிறிது சேர்த் தால் சுவை கூடும்.

- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

* இட்லி மாவுக்கு உளுந்து போதாமல் இருந்தால், பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவுடன் கலந்து இட்லி ஊற்றினால் இட்லி பூப்போல மிருதுவாக இருக்கும்.

* புடலங்காயை நறுக்கியவுடன் சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து பத்து நிமிடம் கழித்து ஒட்டப்பிழிந்து கூட்டு செய்தால் புடலங்காய் கூட்டு நீர்க்காமல் இருக்கும்.

* அடை மாவுடன் தக்காளி சேர்த்து அரைத்து, பின்பு துருவிய கேரட் அல்லது பீட்ரூட் போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கி மாவைக் கரைத்து அடை வார்த்தெடுக்க ருசி மிகுதியாக இருக்கும்.

- ஆர்.பூஜா, சென்னை.

* சிறு துண்டுகளாக்கிய பனீரை தோசை தவா அல்லது ஃப்ரைபேனில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்கும்படி ஃப்ரை செய்து பச்சை பட்டாணி குருமாவில் போட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

* வினிகரில் கலந்த தண்ணீரில் ஒரு மெல்லிய துணியை நனைத்துப் பிழிந்து அதில் பனீரைச்சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் குறைந்தது ஐந்து நாட்கள் வரை கெடாது.

* கிரேவியில் பனீரை போடும்போது உடையாமல் இருக்க பனீர் செய்ய வினிகருக்கு பதில் தயிர் சேர்க்கலாம்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* தேங்காய் சட்னி மீந்துவிட்டால் புளித்த மோரில் கலந்து கொதிக்க வைத்து தாளிக்கவும். Instant மோர்க்குழம்பு தயார்.

* ஃபில்டரில் காபி போடும் முன் ஒரு மெல்லிய துணியை ஃபில்டரின் மேல் போட்டு அதன்பின் காபி தூள் போட்டு நீர் ஊற்றினால் அதில் உள்ள துவாரங்கள் அடைத்துக்கொள்ளாமல் டிக்காஷன் திக்காக இறங்கும்.

* வெண்ணெய் காய்ச்சியதும் உடனடியாக அதை குளிர்ந்த பாத்திரத்தில் கொட்டி வைத்தால் மணல் போல உறையும்.

* சாம்பார், கூட்டு போன்றவற்றிற்கு தேங்காய் இல்லை என்றால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒன்றை தோல் சீவி அரைத்து சேர்க்கலாம். தேங்காயை அரைத்து விட்டது போலவும் இருக்கும். கொழுப்புச்சத்தும் குறையும்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

பூண்டு காரச் சட்னி

தேவையானவை:

புளி - எலுமிச்சை அளவு,

பூண்டு - 30 பல்,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

சீரகம் - 1/2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - 1 கொத்து,

மல்லி - 1 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,

தண்ணீர், உப்பு - தேவையான அளவு,

வெல்லம் - 1 துண்டு.

செய்முறை: முதலில் புளியை நீரில் ஊற வைத்து, கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும். மிக்சர் ஜாரில் பூண்டு பற்களை சேர்த்து லேசாக அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு, அரைத்த மல்லி, கறிவேப்பிலை சேர்த்து, குறைவான தீயில், பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, நன்கு வதங்கியதும், 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும். இறுதியாக வெல்லம் சேர்த்து இறக்கினால், சுவையான காரச் சட்னி தயார்.

- எம்.பவித்ரா, திண்டிவனம்.

Related News