தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிச்சன் டிப்ஸ்

* நெய் காய்ச்சிய பாத்திரத்தில் அரை மூடி துருவிய தேங்காயுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து பர்ஃபி செய்து துண்டுகள் போட்டால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.

Advertisement

* கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும் போது பதம் தவறி நீர்த்து விட்டால் சிறிது சோள மாவைக் கரைத்துச் சேர்த்தால் அல்வா கெட்டிப்படும்.

* மைதா மாவு, சிரோட்டி ரவை இரண்டையும் சம அளவில் கலந்து சர்க்கரை பொடி, நெய் ேசர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு, அதை பிடித்த வடிவத்தில் நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தால் புதுவிதமான ஸ்வீட் தயார்.

* இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பாசிப்பருப்பு 2 கப், கடலை பருப்பு 1 கப் அரைத்து மைசூர் பாகு செய்தால் சாப்ட் அண்ட் டேஸ்ட்டாக இருக்கும்.- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

*தேங்காய் பர்ஃபி செய்யும்போது முக்கால் பதம் வந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் அரை கப் விட்டுக் கிளறினால் மிருதுவாகவும், மைசூர்பாகு போன்ற அபார ருசியுடன் இருக்கும்.

*தேன்குழல், முறுக்கு, சீடை போன்றவற்றைச்செய்யும்போது மாவை வாணலியில் வறுத்துக்கொண்டு பிறகு சூடான வெந்நீர் விட்டுப் பிசைந்து செய்தால் மொறுமொறுவென்று வரும்.

*பட்சணம் நீண்ட நாட்கள் மொறு மொறுப்பாக இருக்க ஒரு துணியில் உப்பை வைத்துக்கட்டி பட்சண டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடினால் பட்சணம் மொறு மொறுப்பாக இருக்கும்.

*காராபூந்தி முத்து முத்தாக இருக்க கடலை மாவுடன் ஒரு கரண்டி அரிசி மாவையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூந்தி கரண்டியில் ஊற்றி தேய்க்க வேண்டும்.- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*முறுக்கு, தட்டை செய்யும்போது மாவுடன் தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்து செய்தால் வேறு எண்ணெயில் சுட்டாலும் தேங்காய் எண்ணெயில் செய்தது போல வாசனையாக இருக்கும்.

*மெதுவடை செய்யும் போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊறவைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். வடை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

*பலகாரங்கள் செய்யும்போது முந்திரிப்பருப்புக்கு பதில் முற்றிய தேங்காயைத் துண்டாக்கி நெய்யில் பொரித்துப் போட்டால் முந்திரிப் பருப்பு போட்டது போலவே இருக்கும்.- கீதா ஹரிஹரன், கேரளா.

*புழுங்கல் அரிசியை களைந்து உலர வைத்து, மாவாக்கி தட்டை செய்தால் சுவை கூடும். கரகரப்பாகவும் இருக்கும்.

*முறுக்கு மாவில் தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்தால், சுவையும், மணமும் கூடும்.

*வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களிலும் முறுக்கு, தட்டை செய்யலாம். சத்து நிறைய கிடைக்கும்.

*பட்சணம் செய்யும் போது அதில் சுக்குப் பொடி சிறிது கலந்து கொண்டால் வாசனையாகவும் இருக்கும். ஜீரணமும் ஆகும்.- ஆர்.பத்மப்ரியா, ரங்கம்.

* பாதுஷா மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடாவுடன் சிறிதளவு டால்டாவையும் சூடு செய்து சேர்த்துப் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக வரும்.

* ஜாங்கிரி செய்வதற்கு உளுந்தை கிரைண்டரில் அரைப்பதைவிட ஆட்டுக்கல்லில் அரைத்தால் நல்லது.

* மைசூர்பாகை வெறும் நெய் மட்டும் சேர்த்துச் செய்யாமல் சிறிதளவு ரீஃபைண்ட் ஆயில் சேர்த்துச் செய்தால், மைசூர்பாக் நன்கு பூத்து வரும்.

* லட்டு, அல்வா, பாதுஷா முதலிய இனிப்பு வகைகள் செய்யும்போது ஜீரா இனிப்புகளில் பூக்காமல் இருக்க பாகு வைக்கும்போதே அரை மூடி எலுமிச்சைப் பழம் பிழிந்துவிடவும்.- எம்.நிர்மலா, புதுச்சேரி.

* தேங்காய் பர்ஃபி தூளாக உதிர்ந்து விட்டால் அதனுடன் வறுத்த ரவை சேர்த்து, மிக்ஸியில் பொடித்து, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்த்து உருண்டைகளாக பிடித்தால் சூப்பர் சுவையில் ரவா லாடு தயார்.

* மைசூர்பாகு உதிர்ந்து தூளாகிவிட்டால், அதனுடன் நெய்யில் வறுத்த கோதுமை மாவு சேர்த்து உருண்டைகளாக பிடிக்கலாம்.- சங்கரி வெங்கட், சென்னை.

 

Advertisement

Related News