தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்க மங்கைகள்…

Advertisement

நன்றி குங்குமம் தோழி

காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.இந்தப் போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார். 84 கிலோ 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி மகுடம் சூடியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு, கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கும் நிலையில், மீராபாய் சானுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆசிய மகளிர் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரு தண்டா.கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ட்ராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான ட்ராப் அணிகள் பிரிவில் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத், பிரீத்தி ரஜக் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 319 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான ஆஷிமா அஹ்லாவத்தும் வெண்கலப் பதக்கத்துடன் திரும்பி வந்து மகிழ்ச்சிஅடைந்தார். ஜூலை மாதம் லோனாடோவில் நடந்த தனது கடைசி சர்வதேச போட்டியான ISSF உலகக் கோப்பையில், ​​நீரு கவுண்ட்பேக்கில் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: மணிமகள்

 

Advertisement