தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உணவுப் பொருட்களில் கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது?

நன்றி குங்குமம் தோழி

சிக்கரி தூள்: காபித் தூளில் சிக்கரி கலந்துள்ளதா என்பதை அறிய ஒரு கண்ணாடி குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி காபி தூளை சேர்க்கவும். காபி தூள் மிதக்கும்.

தேநீர் தூள்: வடிகட்டும் தாளை எடுத்து அதில் சில தேநீர் இலைகளை பரப்பி வைக்கவும். பின்னர் குழாய் நீரில் வடிகட்டி தாளை கழுவவும். அதில் கறை இருந்தால் கலப்படம் என்பதை அறியலாம். தூய தேநீர் இலைகளாக இருந்தால் வடிகட்டி தாளில் கறை இருக்காது.

காய்கறி: தண்ணீரில் பஞ்சினை நனைத்து அதை பச்சைக் காய்கறிகள் மீதோ அல்லது மிளகாய் மீதோ தேய்க்கவும். பஞ்சு பச்சையாக மாறினால் பச்சை நிற கலப்படம் உள்ளது என்று பொருள்.

மஞ்சள் தூள்: மஞ்சள் பொடியில் செயற்கை வண்ணத்தை கலந்து இருப்பதை அறிய கண்ணாடி குவளையில் நீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியை சேர்த்தால், இயற்கையான மஞ்சள் நிறமாக மாறும். கலப்படமாக இருந்தால் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும்.

மிளகாய் தூள்: ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் பொடியை தூவவும். மரத்தூள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும், மிளகாய் பொடி நீரின் அடியில் தங்கும்.

மிளகு: சிறிதளவு மிளகை எடுத்து கண்ணாடி குவளையில் போடவும். தூய மிளகாக இருந்தால் டம்ளரின் அடியில் தேங்கும், கலப்படமாக இருந்தால் (பப்பாளி விதைகள்) நீரில் மிதக்கும்.

பால்: பளபளப்பான சுவற்றின் மேல் ஒரு சொட்டு பாலை தெளிக்கவும். பாலாக இருந்தால் அப்படியே இருக்கும் அல்லது வெண்மை தடம் பதிந்து மெதுவாக கீழே இறங்கும். நீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் வெண்மை தடம் பதிக்காமல் உடனே வழிந்துவிடும்.

நெய்: கண்ணாடி கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெயை எடுத்துக்கொள்ளவும். அதில் அயோடினை 2 - 3 சொட்டுகள் சேர்க்கவும். நீலவண்ணம் தோன்றினால் நெய்யில் பிசைந்த உருளைக்கிழங்கு கலந்துள்ளது என்பதை அறியலாம்.

- சுந்தரி காந்தி, சென்னை.

Related News