தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தீபாவளி பலகார பக்குவங்கள்

நன்றி குங்குமம் தோழி

*உளுந்து வடை செய்யும்போது மாவை உருட்டி வைத்துக்கொண்டு, அரிசி மாவை கையால் லேசாகத் தொட்டு, பிறகு வடை தட்டினால் வடை மேலே மொறுமொறு என்றும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

*முறுக்கு வெண்மையாக இருக்க ஒரு கிலோ அரிசிக்கு கால் கிலோ உளுந்தம் பருப்பு வறுத்துப் போட்டு மாவாக்கி முறுக்கு செய்தால் வெண்மையாக இருக்கும். பெருங்காயம் சேர்க்கக்கூடாது.

*ஒரு பங்கு கடலை மாவுடன், இரண்டு பங்கு பாசிப்பருப்பு மாவு என்ற அளவில் சேர்த்து மைசூர்பாகு செய்தால் வாயில் போட்டவுடன் கரைந்துவிடும்.

*தேங்காய் பர்பி செய்வதற்கு சர்க்கரையை அப்படியே சேர்க்காமல், மிக்ஸியில் போட்டு பொடி செய்து சேர்த்தால் சாப்பிட மிருதுவாக இருக்கும்.

*பாதுஷா செய்தபின், பூஸ்ட் அல்லது போர்ன்வீட்டாவை திக்காக கரைத்து, பாதுஷாவின் மீது ஆங்காங்கே கைகளால் தெளித்தால், வித்தியாசமான டிசைனில் பாதுஷா தயார்.

*முறுக்கு செய்ய மாவு தயாரிக்கும்போது நன்றாக கனிந்த ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்துப் பிசைந்து முறுக்கு செய்தால் தனி ருசியாக இருக்கும். விரைவில் நமுத்துப் போகாது.

*அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிதளவு சமையல் சோடா உப்பு சேர்த்து, பிசைந்து தட்டினால் அதிரசம் நன்கு உப்பி, உள்பக்கம் நன்கு வெந்து, மிருதுவாக, சுவையாக இருக்கும்.

*அதிரசத்துக்கு வெல்லப்பாகு காய்ச்சும் போது வெல்லத்துடன், நெல்லிக்காய் அளவு புளியும், அரை தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளும் சேர்த்துக்கொண்டால் அதிரசம்

மிருதுவாகவும், எண்ணெய் அதிகம் குடிக்காமலும், அருமையாக வரும்.

*ரவா லட்டு, பொட்டுக்கடலை மாவு லட்டு செய்யும்போது, மாவு கலவையில் கால் பங்கு பசும்பால் சேர்த்து செய்தால் மிக ருசியாக இருக்கும்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.